ஒவ்வொரு நொடியும்
நிரூபித்துக் கொண்டிருந்தனர்.
உள்ளதையும் இல்லதையும்
விளைத்துக் காட்டினார்கள்.
எல்லைகளை எப்போதுமே
விரித்துக் கொண்டிருந்தார்கள்
விளிம்புகளை அழித்துக் கொண்டிருந்தான் ஒருவன்.
எழுதிக் குவித்துத் தள்ளினான் இன்னொருவன்.
முடியாத பொறிகள் சாத்தியமாயின.
ஆதாம்கள் எப்போதுமே
பதட்டமாக இருந்தனர்.
ஒவ்வொரு நொடியும்
இருப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர் -
புணர்தலும் புணர்தல் நிமித்தமுமாக.
2 comments:
அருமை செல்வா
super selva...a very natural scenario in our city bus :-)
Post a Comment