Saturday, December 17, 2011

The Road Not Taken

அம்மாவிடம்
சத்தியங்களைப் பண்ணி விட்டாயா
என்று கேட்டேன்.
தேவையா என
யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என்றான்
பொடிமாஸில் இருந்த மிளகாயை
எடுத்துப் போட்டுக் கொண்டே.
சிறிது நேரம் கழித்து
வழக்கத்தை விட சீக்கிரமாகவே
எழுந்து போய் விட்டான் -
பயணத்துக்கான ஏற்பாடுகள்
இன்னும் பாக்கி இருப்பதாக.
மோகன் அம்மாவிடம்
சத்தியம் பண்ணிக்
கொடுத்தானா இல்லையா
என்று தெரியாது.
ஆனால் அவன் திரும்பி வரும்போது
வாங்கி வந்த ஸ்காட்ச்சுகள்
புகைவண்டிச் சம்பவத்துக்கு
பழிதீர்த்த நாளின்
பின்னிரவில் பயன்பட்டன.

3 comments:

கோவி said...

பேருந்தின் பயணம் தொடர வாழ்த்துகள்..

SHAFI said...

Retribution/Murder ka(v)thai...Yaaru antha Mohan??? Selva neengala...

செல்வ கருப்பையா said...

//Yaaru antha Mohan???//

Mohan!!!??? - Is it Mohan Das Karam Chand Gandhi???