Sunday, October 10, 2021

ராகுல் அப்பா

ராகுல் அப்பா வலக் கையில்தான்

எப்போதும் கடியாரம் கட்டுவார்.

வேலை முடிந்து தெரு நுழையும்போதே 

அவர்தானென்பது அத்தர் வாடையிலேயே தெரிந்துவிடும்.

ரொம்பத் தன்மையான மனிதர்.

அதிர்ந்து ரெண்டு வார்த்தை பேசமாட்டார் - 

யாரும் நோகப் பேசியதேயில்லை.

அவர் பேர்கூட யாருக்கும் தெரியாது.

ராகுல் பத்து வருடங்களுக்கு முன்பே

பெயிலான பாடங்களுக்காக

அவரிடம் அடிவாங்கிய இரவில்

வீட்டைவிட்டு ஓடி விட்டாலும்,

எல்லோரும் ராகுல் அப்பா 

என்றே இன்றுவரை கூப்பிடுகிறோம்.

No comments: