Sunday, May 10, 2026

அடைக்குந் தாழ்

போகா எல்லை சென்று

மீண்டுவந்த அவனை

அன்பின் கம்பளிகள் கொண்டு

அணைத்துக் கொண்டேன்...

அவன் அஞ்சி நடுங்கிய

காயங்களுக்கு

அன்பைக் குழைத்து

களிம்பாய்ப் படர்ந்தேன்.

உங்களுக்குத் தெரியுமா?

அவனது சுவாசப்பைகள்

முழுதும் அன்பினாலேயே

நிறைத்திருந்தேன்.

என்றாவது ஒருநாள்

அவன் என்னிடம்

கூறியிருந்திருக்கலாம் -

மூச்சு முட்டுகிறதென.

என்னைப் பார்க்கவரும்

எல்லோரும்

உங்கள் அன்பினை

வாசலிலேயே கழற்றி

வைத்துவிடுங்கள் -

கெட்ட நாற்றமடிக்கிறது.

No comments: