போகா எல்லை சென்று
மீண்டுவந்த அவனை
அன்பின் கம்பளிகள் கொண்டு
அணைத்துக் கொண்டேன்...
அவன் அஞ்சி நடுங்கிய
காயங்களுக்கு
அன்பைக் குழைத்து
களிம்பாய்ப் படர்ந்தேன்.
உங்களுக்குத் தெரியுமா?
அவனது சுவாசப்பைகள்
முழுதும் அன்பினாலேயே
நிறைத்திருந்தேன்.
என்றாவது ஒருநாள்
அவன் என்னிடம்
கூறியிருந்திருக்கலாம் -
மூச்சு முட்டுகிறதென.
என்னைப் பார்க்கவரும்
எல்லோரும்
உங்கள் அன்பினை
வாசலிலேயே கழற்றி
வைத்துவிடுங்கள் -
கெட்ட நாற்றமடிக்கிறது.
No comments:
Post a Comment