அம்மாவிடம்
சத்தியங்களைப் பண்ணி விட்டாயா
என்று கேட்டேன்.
தேவையா என
யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என்றான்
பொடிமாஸில் இருந்த மிளகாயை
எடுத்துப் போட்டுக் கொண்டே.
சிறிது நேரம் கழித்து
வழக்கத்தை விட சீக்கிரமாகவே
எழுந்து போய் விட்டான் -
பயணத்துக்கான ஏற்பாடுகள்
இன்னும் பாக்கி இருப்பதாக.
மோகன் அம்மாவிடம்
சத்தியம் பண்ணிக்
கொடுத்தானா இல்லையா
என்று தெரியாது.
ஆனால் அவன் திரும்பி வரும்போது
வாங்கி வந்த ஸ்காட்ச்சுகள்
புகைவண்டிச் சம்பவத்துக்கு
பழிதீர்த்த நாளின்
பின்னிரவில் பயன்பட்டன.