Saturday, June 03, 2023

நீரளவு நீராம்பல்

சரவணனுக்கு அழுகையே வரவில்லை.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்

தற்கொலைதானென 

உறுதி செய்திருந்தது.

மாமனார் கண்ணோடு 

கண் நோக்கவில்லை.

பெருங்கூட்டத்துக்கு நடுவே 

தனியனாய் நின்றுகொண்டிருந்தான்.

வெட்டியான் கடைசி வரட்டி 

எடுத்துக்கொண்டு 

முகம் பார்த்துக்கொள்ள சொன்னபோதோ

ஆற்றில் தலைமுழுகும்போதோ

வீடுவந்தபின் கட்டிக்கொண்டு அழுத

மகள்களைப் பார்த்தோகூட

சரவணனுக்கு அழுகை வரவில்லை.

அறுத்துக் கொண்டிருந்ததெல்லாம்

ஒரேயொரு கேள்விதான் - 

இன்னும் கொஞ்சம் நம்பியிருக்கலாமோ?